ஹஜ் பயணத்தில் இறந்த இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி
மக்காவில் உள்ள மினா நகரில் ஜமராக்களின் மீது கல்லெறிக்கும் கடமையின் போது இறந்த இந்தியப் பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் கருணைத் தொகை அளிக்கப்படும்.
இந்த தகவலை மினா நகரில் இருந்து இந்திய கான்சல் ஜெனரல் அவ்சாப் சய்யீத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த நெரிசலில் மொத்தம் 362 பேர் இறந்தனர். இவர்களில் 16 பெண்கள் உள்பட 28 பேர் இந்தியர்கள். இந்த 28 பேரில் 2 பேர் சவூதி அரேபியாவில் தங்கியுள்ளவர்கள்.
இந்தியாவைச் சேர்ந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக வழங்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment